Thursday 18 February 2016

போராடு...

தன்னம்பிக்கை







மெழுகுவர்த்திகூட
சுமந்துகொண்டுதானிருக்கிறது
தீயின் வலியை...


   -----யாரோ  மல்லையாவாம் ..
                              
                                

Monday 15 February 2016

ஹைக்கூ ...

















மென்மையாய் விழுந்தது சருகு
வளைந்து நெளிந்தது மலைப்பாம்பாய்
நெடும்பணை
குளத்தில் ....
 
                               -----யாரோ மல்லையாவாம்..

Saturday 13 February 2016

கடுகு டப்பா ..








பருத்திக்கு களையெடுத்து
பத்துரூபா சம்பளத்தில்
எள்ளளவு மிச்சத்தில்
எனக்காக சேர்த்து வைப்பா..
ஆக்குப்பறையில் அடுக்கிவச்ச
கடுகு டப்பா ..
என் தாயிக்கு காசு டப்பா..

முகமூடி..






சந்திப்பவர்களிடமும்
சந்தர்ப்பங்களிலும்..
என் சுயத்தை இழந்து
ஏதாவதொரு
முகமூடி மாட்டியே இருக்க வேண்டியிருக்கிறது........

கவிதைகள்


எப்போதாவது தோன்றுவதை இனி எனக்கான பக்கங்களில் எழுத நினைக்கிறேன் ..
 
எங்கள் ஊரில்
ஒவ்வொரு வெள்ளிகிழமையையும்
உப்புக்காரரும்
பூக்காரரும் தான்
அந்த சாம்பல் நிற அதிகாலையை
சத்தம் போட்டு எழுப்பிவிட்டு  செல்கிறார்கள்...
                                 -----------------------------------------------