Tuesday 22 March 2016

என்னுள்ளில்...




உனது புகைப்படங்களையும்
நினைவுகளையும்
மட்டுமே வைத்துக்கொண்டு
காலத்தின் மடிப்புகளில்
கரைந்து கொண்டிருக்கிறேன் ..
என்னில் நீங்காதிருப்பது
நெஞ்சில் இழப்பும்
நீ .. இல்லாமையுந்தான் ..
உன்னோடிருந்த
நினைவுகளின் மிச்சங்களை மட்டுமே
வைத்துக்கொண்டு
வாழ்ந்துகொண்டும்
கொஞ்சங்கொஞ்சமாய்
செத்துக்கொண்டுமிருக்கிறேன் ..

-----

யாரோ மல்லையாவாம்..








                       

Saturday 5 March 2016

இளமையில் கல் ..

செங்கல்சுமந்து சாலை கடந்த
ஏழைச்சிறுவன்
சுவர்சுமந்த எழுத்தினை படித்துவிட்டுச் சிரித்தான்
இளமையில் கல் ..
எனும்
 வாசகத்தை பார்த்து ....

------------யாரோ மல்லையாவாம் ......